முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு தடை..!! அதையும் மீறி விற்பனை செய்தால்..!! தமிழ்நாடு அரசு எச்சரிக்கை..!!

05:38 PM Nov 22, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

இதுதொடர்பான அறிக்கையில், “அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது மருந்து மற்றும் அழகு சாதனச்சட்டம் 1940 மற்றும் மருந்து விதிகள் 1945 இன் படி குற்றமாகும். தமிழக மருந்து கட்டுப்பாடு துறையின் மூலம் சில்லறை மற்றும் மொத்த மருந்து விற்பனை நிறுவனங்களில் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் மேற்கண்ட விதிமீறல்களில் ஈடுபட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள் மீது கடந்த 6 மாதங்களில் 117 மருந்து விற்பனை உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், அடிமை பழக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை மற்றும் விநியோகம் செய்த 6 மருந்து விற்பனை உரிமங்கள் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், மேற்குறிப்பிட்ட மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் விற்பனை / விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
abortionTamil Naduஎச்சரிக்கைகருக்கலைப்பு மாத்திரைமக்கள் நல்வாழ்வுத்துறை
Advertisement
Next Article