For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வசமாக மாட்டிக்கொண்ட பாலகிருஷ்ணா..!! விசித்ராவை தொடர்ந்து இந்த நடிகைக்கும் பாலியல் தொல்லை..!!

10:54 AM Nov 23, 2023 IST | 1newsnationuser6
வசமாக மாட்டிக்கொண்ட பாலகிருஷ்ணா     விசித்ராவை தொடர்ந்து இந்த நடிகைக்கும் பாலியல் தொல்லை
Advertisement

பிக்பாஸ் இல்லத்தில் நடிகை விசித்ரா தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்துப் பகிர்ந்து கொண்ட பிறகு, தற்போது நடிகை ராதிகா ஆப்தேவும் பாலியல் சீண்டல் குறித்து பேசியிருக்கிறார்.

Advertisement

பிக்பாஸ் வீட்டில் நடிகை விசித்ரா, சினிமா படப்பிடிப்புத் தளத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவரால் தனக்கு நேர்ந்த கசப்பான பாலியல் அத்துமீறல் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய தகவலின் அடிப்படையில் அது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாதான் என ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அவருக்கு எதிர்ப்பும் தற்போது கிளம்பி வருகிறது. இந்நிலையில், இதே பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் நடித்தபோது, அவர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதை நடிகை ராதிகா ஆப்தே தற்போது பகிர்ந்திருக்கிறார்.

இது பற்றி ராதிகா ஆப்தே கூறுகையில், “நான் ஷூட்டிங் சென்ற முதல் நாளே என்னை பார்த்ததும் என் காலை அந்த டாப் ஹீரோ தட்டிவிட்டுச் சென்றார். அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடனே எழுந்து அந்த இடத்திலேயே அவரை திட்டினேன். இனி ஒருபோதும் இப்படி செய்யக்கூடாது என அத்தனை ஜூனியர் ஆர்டிஸ்ட் முன்பும் வார்னிங் செய்தேன். அதுமட்டுமின்றி தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்தது. அங்கு ஹீரோக்களை கடவுள் போல பார்க்கிறார்கள்.

ஒருமுறை ஹீரோ ஒருவர் என்னை அழைத்து, முதுகு தேய்த்துவிட வேண்டும் என்றால் எப்போது வேண்டுமானாலும் ரூமுக்கு கூப்பிடு வருகிறேன் என்று சொன்னார். ஆனால், தமிழ் சினிமாவில் நான் ரஜினியுடன் நடித்தபோது அப்படி நடந்ததில்லை. அவரைப் போன்ற சிறந்த மனிதர் இருக்கவே முடியாது. அந்த அளவுக்கு அன்பானவராக இருந்தார்” என கூறியிருக்கிறார்.

Tags :
Advertisement