For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Breaking: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை... தேசிய தலைவர் மாயாவதி சென்னை வருகை...!

Bahujan Samaj Party National President Mayawati visits Chennai
07:25 AM Jul 06, 2024 IST | Vignesh
breaking  பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் படுகொலை    தேசிய தலைவர் மாயாவதி சென்னை வருகை
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி.

Advertisement

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இருந்து வந்தார். சென்னை பெரம்பூரில் வசித்து வந்த இவர் நேற்று அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பெரம்பூர் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார். இந்த கொலை சம்பந்தமாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களையும், இரங்கல் செய்தியையும் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்த சென்னை வருகிறார் மாயாவதி.

Tags :
Advertisement