முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'கெட்ட ஆவிகள் உலா வருது.. உன் புருஷன் செத்துருவான்’..!! பயத்தில் பெண் செய்த காரியத்தை பாருங்க..!!

07:31 AM Nov 25, 2023 IST | 1newsnationuser6
Advertisement

கோவை மாவட்டம் விலாங்குறிச்சி, சேரன்மாநகர் விரிவாக்க பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், தங்களது வீட்டில் வேலையை முடித்து விட்டு, பூஜை அறையில் சாமி கும்பிட தயாரானபோது, வீட்டின் வாசல் மணி அடித்தது. வீட்டின் உள்ளே இருந்தபடி எட்டிப்பார்த்த பெண்மணியை வாசலில் காவி உடையில் மந்திர வாதி போல நின்ற இளைஞன், தன் கையில் ஏதோ வைத்து 'உன் வீட்டின் உள்ளே கெட்ட ஆவிகள் உலா வருகிறது. அதை விரட்டலனா, உன் புருஷன் செத்து போவாரு' என கத்தி சொன்னான். பயத்தில் அந்த பெண் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

Advertisement

ஆனால், அந்த மந்திர திருடன் மீணடும் மீண்டும் வீட்டின் முன்பு நின்று கொண்டு அழைத்துள்ளான். இவரும் என்ன என்று வீட்டின் உள்ளே இருந்தபடி கேட்டுள்ளார். ஆனால், அந்த நபர் வெளியே வருமாறு அழைத்துள்ளான். அந்த பெண்ணும் என்ன என்று கேட்டபடி வெளியே வந்துள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்தபடியே, அந்த மந்திரவாதி, என் முகத்தைப் பார் என்று ஹிப்னாடிசம் செய்துள்ளான். இதனால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே அடையாளம் தெரியாத நபர் கூறியபடி தனது கையில் மாட்டி இருந்த 2 தங்க மோதிரங்களை கழட்டி கொடுத்துள்ளார்.

சுயநினைவு இல்லாமல் மோதிரத்தை கழட்டி கொடுத்தவுடன், வாங்கிய நபர் தப்பிச் சென்றாக கூறப்படுகிறது. இதில் நீண்ட நேரம் கழித்து சுயநினைவு திரும்பியதும், தனது கையில் இருந்த மோதிரம் காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடந்த விவரங்களை கணவரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஹிப்னாடிசம் செய்து தங்க மோதிரங்களை பறித்துச்சென்ற புது வகையான மந்திர திருடனை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆதாரங்களாக வைத்து வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
காவல்துறை விசாரணைகெட்ட ஆவிகோவை மாவட்டம்புதுவித திருட்டுமந்திர திருடன்
Advertisement
Next Article