For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Award | ’கலைஞர் எழுதுகோல்’ விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்..!! இந்த தகுதி இருக்கா..? தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

04:09 PM Mar 13, 2024 IST | 1newsnationuser6
award   ’கலைஞர் எழுதுகோல்’ விருதுக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்     இந்த தகுதி இருக்கா    தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Advertisement

ஆண்டுதோறும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினமான ஜூன் 3ஆம் தேதியன்று, ஒரு சிறந்த இதழியலாளருக்கு "கலைஞர் எழுதுகோல் விருது" வழங்கி கெளரவிக்கப்படும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், 2023ஆம் ஆண்டிற்கான இவ்விருதுக்குரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த விருதில் ரூபாய் 5 லட்சம் பரிசுத் தொகையுடன் பாரட்டுச் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

Advertisement

கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் :

* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

* தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

* பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.

* இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

* விண்ணப்பதாரர் நேரடியாகவோ அல்லது பரிந்துரையின் அடிப்படையிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.

* விண்ணப்பதாரர்களில் ஒருவரே விருதாளராக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான தனது விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு 30.04.2024 க்குள்ளாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Congress | பெண்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! ஆண்டுக்கு ரூ.1 லட்சம்..!! காங்கிரஸ் கட்சியின் 5 முக்கிய வாக்குறுதிகள்..!!

Advertisement