மச்சினிச்சியுடன் மஜா செய்த ஆட்டோ ஓட்டுநர்..!! 10 வயது மகளையும் விட்டு வைக்கல..!! கன்னியாகுமரியை அதிரவைத்த சம்பவம்..!!
கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் சரமாரியாக அடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அன்சார் (33). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கும் மனைவியின் சொந்த சகோதரிக்கும் தகாத உறவு இருந்துள்ளது. முகமது அன்சார் அந்த பெண்ணையும் தனியாக வீடு எடுத்து அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பெண் வீட்டில் இல்லாத போது அவரது 10 வயது பெண் குழந்தையான சிறுமியை முகமது அன்சார் மிரட்டி கடந்த சில மாதங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
தாயின் கள்ளக்காதலன் முகமது அன்சார் மற்றும் தாயின் கட்டுப்பாட்டில் இருந்த அந்த சிறுமி தாயிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியும் அவர் கண்டு கொள்ளாததால், தனது பாட்டி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த கொடுமை சொல்லி அழுதுள்ளார். இதனையடுத்து, பாட்டி அந்த சிறுமியுடன் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இரவு குடிபோதையில் இருந்த முகமது அன்சார் பாட்டி வீட்டில் இருந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தன்னுடன் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது, சிறுமியின் பாட்டி சத்தம் போடவே அங்கு திரண்ட மக்கள் சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்ததோடு, தப்ப முயன்ற முகமது அன்சாரை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த முகமது அன்சார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : மறைந்த அப்பாவிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் இளைய மகன்..!! வெளியான சூப்பர் அப்டேட்..!!