முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ரத்து..!! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

04:14 PM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி, முன்னாள் அமைச்சர்கள் கோ.சி.மணி, குழந்தைவேலு ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் 1996 - 2001 ஆண்டுகளில் திமுக ஆட்சி நடைபெற்றது. இந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அடுத்து வந்த அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, ஐ.பெரியசாமி மற்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் மீது வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, குற்றத்திற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என கூறி அனைவரையும் விடுதலை செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2009ஆம் ஆண்டு ஆறுமுகம், கோவிந்தன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தீர ஆய்வு செய்து தீர்ப்பு வழங்கிவிட்டது. மேலும் இந்த வழக்கு காலதாமதமானது எனக் கூறி நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் நரசிம்மா அடங்கிய அமர்வு இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags :
அதிமுக வழக்குஅமைச்சர்கள்உச்சநீதிமன்றம்திமுக
Advertisement
Next Article