For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்… கர்ப்பிணி மனைவிக்கு 10 முறை துப்பாக்கி சூடு… அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கேரள வாலிபர்.!

07:14 PM Nov 17, 2023 IST | 1Newsnation_Admin
விபரீதத்தில் முடிந்த வாக்குவாதம்… கர்ப்பிணி மனைவிக்கு 10 முறை துப்பாக்கி சூடு… அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கேரள வாலிபர்
Advertisement

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கர்ப்பிணி மனைவியை 10 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு இருக்கும் கணவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம். இவரது கணவர் அமல் ரெஜி. இந்த தம்பதியினருக்கு டேவிட் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் மீரா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த வருடம் இந்த தம்பதியினர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு வந்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் மீரா செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று கணவன் மற்றும் மனைவி இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அமல் ரெஜி தனது துப்பாக்கியால் மனைவியை 10 முறை சுட்டு இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த மீரா தாருக்குள்ளையே சரிந்துள்ளார். சிறிது நேரத்திற்குப் பின் தனது தவறை உணர்ந்த அமல் ரெஜி அருகில் இருக்கும் தேவாலயத்திற்கு சென்று காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் படுகாயம் அடைந்த மீரா ஆபிரகாமை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் அவரது வயிற்றில் இருந்த குழந்தை இறந்து விட்டது. தற்போது மீரா ஆபிரகாமுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அமல் ரெஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

Tags :
Advertisement