For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கருப்பை நீர்க்கட்டியால் அவதிபடுகிறீர்களா!… மாத்திரையின்றி நீர்க்கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்க!….

03:20 PM Jan 15, 2024 IST | 1newsnationuser1
கருப்பை நீர்க்கட்டியால் அவதிபடுகிறீர்களா … மாத்திரையின்றி நீர்க்கட்டி கரைய இதை மட்டும் செய்யுங்க …
Advertisement

இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சினைப்பை நீர்க்கட்டியால் தான்.எந்த பெண்களை கேட்டாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் என்கிறார்கள். ஒழுங்கற்ற மாதவிடாய் கர்ப்பப்பையில் நீர்க்கட்டி ஏற்படுவதால் ஏற்படுகிறது.இதனை (PCOD) என்கிறார்கள். இது எப்படி தான் வருகிறது இதை எப்படி தான் குணமாக்குவது என்பதை பற்றி பார்ப்போம்.
கருப்பை நீர்க்கட்டி என்பது நோயல்ல, குறைபாடுதான் கருமுட்டைகள் வெடித்து வெளிவராத காரணத்தால் உண்டாகும் இந்த பிரச்சனை பல்வேறு வயதிலுள்ள பெண்களையும் பாதிக்கலாம். அந்தந்த வயதினருக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்க வேண்டும். கர்ப்பப்பையில் ஹார்மோன் குறைபாடு காரணமாக மாதவிடாய் சுழற்சி மாதமாதம் சீராக இல்லாமல் தாமதமாக வருவது, மூன்று மாதம், இரண்டு மாதம் என தாமதமாக வெளியாதல் போன்ற நிலை ஏற்படுகிறது , இதற்க்கு கழற்சிக்காய் ஒரு நல்ல தீர்வாகும் நாட்டு மருந்துகளில் கழற்சிக்காய் என்று கேட்டால் கொடுப்பார்கள் கழற்சிக்காய் என்பது ஒன்றுமில்லை சூடுக்கொட்டை. இந்த கழற்சிக்காயை உடைத்தால் உள்ளே பருப்பு இருக்கும். இந்த பருப்புடன் 4 மிளகு சேர்த்து தினமும் காலையில் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கான ஒழுங்கற்ற மாதவிடாய் சரியாகும்.
கல்யாணி முருங்கை கீரையை வேகவைத்தோஅல்லது பொறியலாகவோ எடுத்துக்கொள்வது நீர்க்கட்டிக்கு நல்ல தீர்வாகும்.

Advertisement

Tags :
Advertisement