முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’என்கிட்ட பிரச்சனை பண்ணவே வருவீங்களா’..? OPS-களால் மன உளைச்சலுக்கு ஆளான ஓ.பன்னீர்செல்வம்..!!

02:09 PM Apr 12, 2024 IST | Chella
Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மொத்தம் 4 முனை போட்டி நிலவுகிறது.

Advertisement

இந்நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரின் பெயரில் போட்டியிடும் மற்ற வேட்பாளர்கள் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், ஓபிஎஸ்க்கு பலாப்பழ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற சுயேட்சை வேட்பாளர்கள், தங்களின் பெயரை ஆங்கிலத்தில் OPS என குறிப்பிட்டு திராட்சை கொத்து, கரும்பு விவசாயி, வாளி உள்ளிட்ட சின்னங்களில் வாக்களிக்குமாறு சுவர் விளம்பரம் செய்துள்ளனர். இது ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Read More : பெண் குழந்தைகளுக்கு சூப்பர் திட்டம்..!! ரூ.25 லட்சத்தை மொத்தமாக அள்ளலாம்..!! பெற்றோர்களே நோட் பண்ணுங்க..!!

Advertisement
Next Article