For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி...! ஏப்ரல் 19-ஆம் தேதி அனைத்து திரையரங்கு ஊழியர்களுக்கும் விடுமுறை...!

08:37 PM Apr 10, 2024 IST | Vignesh
மகிழ்ச்சி     ஏப்ரல் 19 ஆம் தேதி அனைத்து திரையரங்கு ஊழியர்களுக்கும் விடுமுறை
Advertisement

லோக்சபா தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் படி, தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு ஊழியர்களுக்கும் ஏப்ரல் 19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு திரைப்படக் சங்கம் புதன்கிழமை அனைத்து திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறையாக அறிவித்துள்ளது.

இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; மக்களவைத் தேர்தலுக்காக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி முடிவுகள் வெளியாகும். நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையத்தின்படி, அனைத்து திரையரங்கு ஊழியர்களும் தமிழகத்தில் ஏப்ரல் 19-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement