For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி..!! ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து..!!

02:38 PM Feb 17, 2024 IST | 1newsnationuser6
டெல்லியில் மீண்டும் ஒரு அதிர்ச்சி     ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து
Advertisement

டெல்லியில் உள்ள படேல் நகர் - தயாபஸ்தி பிரிவில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துகுள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

டெல்லியில் இன்று ஜாகிரா மேம்பாலம் அருகே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத நிலையில், தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடம் புரண்டதில் 8 பெட்டிகள் விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அப்பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் திசை திருப்பி அனுப்பப்படுகிறது. இந்தியாவில் அடிக்கடி இது போன்ற ரயில் விபத்துகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Tags :
Advertisement