For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்... வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு...!

Announcement of local body elections in Tamil Nadu soon Electoral Officer ordered to keep ballot boxes ready all over Tamil Nadu
05:42 AM Sep 08, 2024 IST | Vignesh
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்    வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க உத்தரவு
Advertisement

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உள்ள நிலையில் தமிழக முழுவதும் வாக்கு பெட்டிகளை தயார் நிலையில் வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார் ‌

இதுகுறித்து, சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளான, மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எழுதியுள்ள கடித்தில் ‘‘ஊரக உள்ளாட்சிகளின் சாதார தேர்தலுக்கு தேவையான அனைத்து வகையான வாக்குப்பதிவு பொருட்களையும் தயார்நிலையில் வைப்பது அவசியமாகிறது. இதில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகளை தயார் நியையில் வைக்க வேண்டும்.

Advertisement

எனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வகையான வாக்குப்பெட்டிகளின் தற்போதைய தரம் மற்றும் நிலையை, இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களுக்குச்சென்று ஆய்வு செய்து, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தும் வகையில் அவற்றில் சிறிதளவு பழுதடைந்தவை, முழுமையாக பழுத்தடைந்தவற்றை தரம் பிரித்து வைக்க வேண்டும். சிறிய பழுதுகளை சரி செய்ய பெட்டி ஒன்றுக்கு ரூ.21 வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. அரசு வழங்கியுள்ள வழிகாட்டுதல்படி அவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement