Election: ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு!… வழிபாட்டு தளங்களில் பரப்புரைக்கு தடை!… மீறினால் கடும் நடவடிக்கை!
Election: நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில தினங்களில் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில், தேர்தல் தேதி வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் வெளியாகவுள்ள நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு சில தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது இதில் அரசியல் கட்சிகள் சாதி,மதம், மொழி அடிப்படையில் வாக்கு சேகரிக்க கூடாது தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களை தேர்தல் பரப்பரைக்கு பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நெறிமுறைகளை நட்சத்திர பேச்சாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்பற்ற வேண்டும் மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Readmore: பணம் மட்டுமல்ல, தங்கமும் வழங்கும் ATM!… இந்தியாவில் புதிய டெக்னாலஜி!… எங்க உள்ளது தெரியுமா?