முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து..!! 3 பேர் பலி..!! இருவர் கவலைக்கிடம்..!! ஈரோட்டில் அதிர்ச்சி..!!

07:46 AM Nov 13, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னனூர் கிராமத்தில், கார் மரத்தில் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பங்களாபுதூர் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் 5 பேர், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களின் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மீண்டும் தங்கள் வீட்டிற்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

சின்னமனூர் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் யார்? அவர்களின் ஊர் எது? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Tags :
3 பேர் பலிஇருவர் கவலைக்கிடம்ஈரோடு மாவட்டம்கோர விபத்துசின்னமனூர்விபத்து
Advertisement
Next Article