For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஆட்டோவில் சென்ற இளம்பெண் பலாத்காரம்..!! பெங்களூரில் அதிர்ச்சி!!

An auto driver raped a young woman alone in the middle of the night in Bengaluru, Karnataka
04:19 PM Aug 18, 2024 IST | Mari Thangam
ஆட்டோவில் சென்ற இளம்பெண் பலாத்காரம்     பெங்களூரில் அதிர்ச்சி
Advertisement

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நள்ளிரவில் தனியாக வந்த இளம்பெண்ணை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பணியில் இருந்த போதே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை மருத்துவர்கள் முன்னெடுத்து வருகிறர்கள். இத்தகைய சூழலில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அதிர்ச்சி அளிக்கும் மற்றொரு கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெங்களூரின் கோரமங்கலாவில் உள்ள பஃப் ஒன்றிற்கு சென்று விட்டு ஆட்டோவில் வீடு திரும்பியுள்ளார். இளம்பெண் மதுபோதையில் இருப்பதை அறிந்துகொண்ட ஆட்டோ டிரைவர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஆட்டோவை ஓட்டி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

அரை மயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண், தனது தோழிக்கு செல்போனில் அழைத்து தகவல் தெரிவித்து இருக்கிறார். இதையடுத்து இளம்பெண் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தற்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் எமெர்ஜென்சி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Read more ; UPSC வழியாக ஆர்.எஸ்.எஸ்-ல் உள்ளவர்களுக்கு பதவி..!! – ராகுல் காந்தி கண்டனம்

Tags :
Advertisement