முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

34 வயது பெண்ணை கரம்பிடித்த 80 வயது முதியவர்..!! சோசியல் மீடியாவில் பற்றிக் கொண்ட காதல்..!!

04:51 PM Apr 03, 2024 IST | Chella
Advertisement

சமூக வலைதளம் மூலம் உருவான காதலால் 34 வயது பெண்ணை 80 வயது முதியவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Advertisement

தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருப்பதில்லை. சில நேரங்களில் ஸ்மார்ட்போன் தான் நம்மை பயன்படுத்துகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக, சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. அதன்மூலம் ஏற்பட்ட காதலால் நடைபெற்ற திருமணமும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அந்த வகையில், மத்தியப்பிரதேச மாநிலம் அகர் மாவட்டத்தின் மகாரியா கிராமத்தை சேர்ந்தவர் 80 வயதான முதியவர் பலுராம் பக்கிரி. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியை சேர்ந்தவர் 34 வயதான பெண் ஷீலா இங்கிள். இவர்கள் இருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்பு, இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதன்படி, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. தற்போது, திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Read More : கூட்டுறவு வங்கிகளில் திமுகவின் கருப்பு பணம்..!! ஐடி விசாரணையில் அம்பலம்..!! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்..!!

Advertisement
Next Article