For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சென்னையில் 18 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்...! அண்ணாமலையால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்...!

06:15 AM Jan 19, 2024 IST | 1newsnationuser2
சென்னையில் 18 வயது பெண்ணுக்கு நடந்த கொடூரம்     அண்ணாமலையால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம்
Advertisement

பட்டியல் சமூகத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ராதிகா என்பவரை சிகரெட்டால் சூடு வைத்தும் கடுமையாக தாக்கியும் துன்புறுத்திய திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்களின் மகன் வீட்டில் வேலை செய்த, 18 வயது பட்டியல் சமூக இளம்பெண், சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கடுமையாகத் தாக்கப்பட்டும், சிகரெட்டால் சூடு வைத்தும் துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவக் கல்வி பயில உதவியாக இருக்கும் என்பதற்காகவும், எளிய குடும்பச் சூழ்நிலை காரணமாகவும், வீட்டு வேலை செய்ய வந்த இளம்பெண்ணை, இத்தனை கொடூரமாகத் தாக்கியிருப்பது, திமுக என்ற அதிகாரத் திமிரையே காட்டுகிறது.

மேலும் அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.16,000 ஊதியம் என்று கூறிவிட்டு, ரூ.5,000 மட்டுமே இத்தனை மாதங்களாக ஊதியம் வழங்கியிருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. உடனடியாக, விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Tags :
Advertisement