முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

1 மாத கைக்குழந்தையை, மைக்ரோவேவ் ஓவனில் தவறுதலாக வைத்த தாய்.! அமெரிக்காவில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்.!

06:30 PM Feb 14, 2024 IST | 1newsnationuser4
Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவில் தாய் ஒருவர் செய்த கொடூர செயல் காண்போரின் நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது. தொட்டிலுக்கு பதிலாக, குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து தூங்க வைக்க முயற்சி செய்து, தனது ஒரு மாத குழந்தையை கொலை செய்திருக்கிறார். இப்போது அவர் பத்து முதல் 30 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்கொள்ளவிருக்கிறார்.

Advertisement

அமெரிக்காவில் உள்ள கான்சாஸ் நகரத்தில், 26 வயதான மரியா தாமஸ், தனக்கு ஒரு மாதத்திற்கு முன் பிறந்த குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து, மைக்ரோவேவ் ஓவனில் வைத்திருக்கிறார்.

இது தற்செயலாக நடந்தது என்று அவர் கூறுகிறார். பிறகு அந்த நாட்டில் அவசர உதவிக்கு அழைக்கக்கூடிய எண்ணான 911க்கு அழைத்து குழந்தை சுவாசிக்கவில்லை என்று கூறி மருத்துவ உதவியை நாடியிருக்கிறார்.

சம்பவ இடத்திற்கு அவசர உதவியாளர்கள் விரைந்து வந்த போது அந்த ஒரு மாத பெண் குழந்தை கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரைத் துறந்திருந்தது. ஜா'ரியா என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண் குழந்தை மிகவும் அழகாக இருப்பாள் என்று மரியாவின் தோழி கூறியுள்ளார்.

மரியா பல ஆண்டுகளாக மன நோய்க்காக சிகிச்சை மேற்கொள்வதாகவும், கர்ப்பத்தின் காரணமாக சில மாதங்களாக அந்த மருந்துகளை உட்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் மரியாவின் மனநிலை மோசமடைந்ததாகவும் அவரது தோழி கூறினார். இருந்தபோதிலும் அவர் தனது மகளையும், தனது தாய்மையும் மிகவும் நேசித்ததாகவும் கூறுகிறார். தற்போது மரியா, 10 முதல் 30 ஆண்டு காலம் வரை சிறை தண்டனையை எதிர்கொள்கிறார்.

Tags :
Americamental illnessMicrowave ovenmurderNew mothernewborn babypolice investigation
Advertisement
Next Article