For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பூலாநந்தீஸ்வரர் ஆலயம் : உயரத்தில் மாறி மாறி காட்சி தரும் அதிசய சிவ லிங்கம்..!! எங்க இருக்கு தெரியுமா?

Although there are many Shiva dalas, the Phulanandeeswarar temple in Theni Chinnamanur offers a wonderful display of Shiva's idol changing according to your height
07:39 AM Jul 26, 2024 IST | Mari Thangam
பூலாநந்தீஸ்வரர் ஆலயம்   உயரத்தில் மாறி மாறி காட்சி தரும் அதிசய சிவ லிங்கம்     எங்க இருக்கு தெரியுமா
Advertisement

பல சிவ தளங்கள் இருந்தாலும், தேனி சின்னமனூரில் உள்ள பூலாநந்தீஸ்வரர் ஆலையத்தில் சிவனின் சிலை உங்கள் உயரத்திற்கு ஏற்ப மாறும் வகையில் அதிசயத்துடன் காட்சி அளித்து வருகின்றார்.

Advertisement

பொதுவாக ஒவ்வொரு கோயிலில் தனி சிறப்பும், வரலாறும் எப்போதும் சிறப்பு வாய்ந்தவையாகவே உள்ளது. ஆனால் ஒரு சில கோயிலின் அற்புதமான மற்றும் மர்மமான வரலாறு பலருக்கும் தெரிந்திருக்காது. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் பல அற்புதமான மற்றும் ஆச்சர்யமான உண்மைகளை உள்ளடக்கியுள்ளது. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

இந்த பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் சன்னதியில் அமைந்துள்ள அம்மனை சிவகாமி அம்மன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். இந்த கோயிலில் அமைந்துள்ள சிவகாமி அம்மனுக்கு அர்ச்சகர் எத்தனை முறை அலங்காரம் செய்தாலும் முகத்தில் மட்டும் வேர்வை வடிந்து கொண்டே உள்ளது. இதன் காரணம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை.

இக்கோயிலில் அமைந்துள்ள லிங்கத்தின் சிலை வெட்டுப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக கூறப்பட்டு வருவது, மன்னன் ஆலிங்கனம் சிவனுடன் சண்டை செய்த போது இந்த காயம் ஏற்பட்டதாகவும், அதன் நினைவாகவே வெட்டு காயத்துடனும், மன்னனின் மார்பு கவச தடத்துடனும் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பார்ப்பவர்களின் பார்வை எந்த அளவிற்கு உயரமாக செல்லுமோ அந்த அளவிற்கு இக்கோயிலின் சிவலிங்கம் உள்ளது என்பது தனி சிறப்பாக கருதப்பட்டு வருகிறது.

மேலும் இந்த ஊரில் சுரபி எனும் நதி உள்ளது. இந்த நதியில் இறந்தவர்களின் எலும்புகள் விழுந்தால் அந்த எலும்புகள் கல்லாக மாறும் என்றும், இக்கோயிலின் மரத்தில் பூக்கும் நாகலிங்கப்பூவின் நடுவில் லிங்கம் உள்ளது போலவும், லிங்கத்தை சுற்றி ஆதிசேஷன் நிற்பது போலவும் உள்ளது. எனவே இந்த பூவை பக்தர்கள் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து சென்று வழிபட்டு வருகின்றனர்.

Read more ; Breaking…! கனமழை காரணமாக நீலகிரியில் 2 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை…!

Tags :
Advertisement