For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொன்முடியின் இலாகா அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு..!! வெளியானது அறிவிப்பு..!!

01:13 PM Dec 21, 2023 IST | 1newsnationuser6
பொன்முடியின் இலாகா அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு     வெளியானது அறிவிப்பு
Advertisement

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ரூ.50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்துள்ளார். அதோடு, மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனை அடுத்து அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement