தமிழ்நாடு முழுவதும்..!! ஜனவரி 26ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்..!! அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!
04:21 PM Jan 12, 2024 IST
|
1newsnationuser6
Tags :
Advertisement
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதுதொடர்பான அறிவிப்பில், ஜனவரி 26ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடத்தவும், கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பை ரூ.5,000ஆக உயர்த்தியும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், கிராம சபை கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்ட நிகழ்வுகளை ‘நம்ம கிராம சபை’ செயலியில் உள்ளீடு செய்யவும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Next Article