முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எனக்கு தெரிந்தது எல்லாம் சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி தான்’..!! வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் சச்தேவ்..!!

'I know food, water and bondati in Tamil. I am trying to learn Tamil soon,” said Varalakshmi's husband Nikolai.
04:52 PM Jul 15, 2024 IST | Chella
Advertisement

”எனக்கு தமிழில் தெரிந்தது சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி. நான் சீக்கிரமாகவே தமிழை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்” என்று வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு அண்மையில் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் உடன் திருமணம் நடந்து முடிந்தது. இன்று அவர் தன்னுடைய கணவர் மற்றும் தந்தை சரத்குமாருடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நிக்கோலாய் சச்தேவ் பேசுகையில், ”வணக்கம்.. மன்னித்துக்கொள்ளுங்கள்.. என்னால் சரளமாக தமிழில் பேச முடியாது. ஆனால், முடிந்த வரை தமிழை வேகமாக கற்றுக்கொள்கிறேன். எனக்கு தமிழில் தெரிந்தது சாப்பாடு, தண்ணீர், பொண்டாட்டி. நான் சீக்கிரமாகவே தமிழை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். காரணம், நீங்கள் அனைவரும் என்னுடைய மக்களாகி விட்டீர்கள். மும்பை என்னுடைய வீடு கிடையாது.

சென்னைதான் என்னுடைய வீடு. வரலட்சுமி திருமணத்திற்கு பின்னர் அவருடைய பெயரை மாற்ற வேண்டும் என்று நினைத்தார். கண்டிப்பாக அவரது பேரின் நடுவில் இருக்கும் சரத்குமார் என்ற பெயரை நீக்க மாட்டார் என்பது தெரியும். ஆனால், அதனுடன் என்னுடைய பெயரில் இருந்து சச்தேவ் என்பதை வைக்க வேண்டும் என்று சொன்னார். ஆனால், அது எனக்கு வேண்டாம். அவர் வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரிலேயே அழைக்கப்படுவார். நான் அவரது பெயரை என்னுடைய பெயருடன் சேர்த்துக்கொள்கிறேன். அதன்படி, என்னுடைய பெயரில், அவரது பெயரை சேர்த்து, நிக்கோலாய் வரலட்சுமி சரத்குமார் சச்தேவ் என்று அழைக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.

Read More : ’என்னை கொல்ல 2 முறை சதி’..!! ’துப்பாக்கிகளுடன் கைது’..!! எலான் மஸ்க் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

Tags :
தமிழ்திருமணம்நடிகை வரலட்சுமி சரத்குமார்நிக்கோலாய் சச்தேவ்
Advertisement
Next Article