முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Kids: எச்சரிக்கை!… குழந்தைகளை குறிவைத்த கஞ்சா சாக்லெட் கும்பல்!… மூட்டை மூட்டையாக பறிமுதல்!

07:39 AM Mar 20, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Kids: ஐதராபாத்தில் குழந்தைகளை குறிவைத்து கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Advertisement

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், கடைகளில் விற்பனை செய்வதும் போலீசாருக்கு ரகசிய தகவல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 21,000 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சா சாக்லேட் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த சிபுகுமார், சீத்தாராம் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் 21 ஆயிரம் கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: வேட்பாளர்கள் கவனத்திற்கு..!! 5 பேருக்கு மட்டுமே அனுமதி..!! 2 வாகனங்கள் மட்டுமே செல்லலாம்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Tags :
Ganja Chocolateகஞ்சா சாக்லெட் கும்பல்குழந்தைகள் குறிவைப்புமூட்டை மூட்டையாக பறிமுதல்
Advertisement
Next Article