For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Kids: எச்சரிக்கை!… குழந்தைகளை குறிவைத்த கஞ்சா சாக்லெட் கும்பல்!… மூட்டை மூட்டையாக பறிமுதல்!

07:39 AM Mar 20, 2024 IST | 1newsnationuser3
kids  எச்சரிக்கை … குழந்தைகளை குறிவைத்த கஞ்சா சாக்லெட் கும்பல் … மூட்டை மூட்டையாக பறிமுதல்
Advertisement

Kids: ஐதராபாத்தில் குழந்தைகளை குறிவைத்து கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

Advertisement

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரியர் சர்வீஸ் மூலம் கஞ்சா சாக்லேட்டுகளை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதும், கடைகளில் விற்பனை செய்வதும் போலீசாருக்கு ரகசிய தகவல் மூலம் தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் இரண்டு இடங்களில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், 21,000 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சா சாக்லேட் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட பீகாரைச் சேர்ந்த சிபுகுமார், சீத்தாராம் சிங் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில் 21 ஆயிரம் கிலோ கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: வேட்பாளர்கள் கவனத்திற்கு..!! 5 பேருக்கு மட்டுமே அனுமதி..!! 2 வாகனங்கள் மட்டுமே செல்லலாம்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!

Tags :
Advertisement