முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய அதிமுக நிர்வாகி..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி..!!

Malarkodi Shekhar (Joint Secretary of Thiruvallikkeni West Region League) from South Chennai North (East) district is removed from all the responsibilities including basic membership of the League from today.
10:28 AM Jul 18, 2024 IST | Chella
Advertisement

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்து வரும் நிலையில், கொலையில் அதிமுக, திமுக, பாஜகவை சேர்ந்த நபர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

Advertisement

குறிப்பாக, அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மலர் கொடி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிமுக கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்...

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழகத்தினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More : வெளிமாநில நிர்வாகிகளை மாநாட்டிற்கு இறக்கும் விஜய்..!! மாஸ் பிளான்..!! பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்..!!

Tags :
எடப்பாடி பழனிசாமிமலர் கொடி
Advertisement
Next Article