முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிமுக முன்னாள் MLA பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!! தொடர் சோதனையால் எடப்பாடி அதிர்ச்சி..!!

10:18 AM Mar 01, 2024 IST | 1newsnationuser6
Advertisement

கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து பிரதான கட்சிகளும் ஆயுதமாகி வரும் நிலையில், இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் உள்ள அதிமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளிட்ட இடங்களில் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் இறங்கியுள்ளது. இன்று காலை முதல் பிரபு மற்றும் அவரது தந்தை அய்யப்பா ஆகிய இருவரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபு மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரது வீடு, பண்ணை வீடு பால்பண்ணை உள்ளிட்ட 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. பிரபுவின் தந்தை அய்யப்பா, அதிமுகவில் தியாகதுருகம் ஒன்றிய செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : ADMK | ’யாரும் எதிர்பார்க்கல’..!! ’டாப் பதவியை கேட்கும் பாமக’..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!

Advertisement
Next Article