For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!! பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

12:01 PM Mar 23, 2024 IST | 1newsnationuser6
40 தொகுதிகளுக்கும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்     பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
Advertisement

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 40 தொகுதிகளுக்கும் அதிமுகவுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Advertisement

அதன்படி கோவை, பொள்ளாச்சி நீலகிரிக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு, திருப்பூருக்கு செங்கோட்டையன் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. தென்சென்னைக்கு கோகுல இந்திரா, மத்திய சென்னை தொகுதிக்கு தமிழ் மகன் உசேன், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேனி, ராமநாதபுரத்திற்கு ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பென்ஜமின், காஞ்சிபுரத்துக்கு வளர்மதி, அரக்கோணத்திற்கு வீரமணி, வேலூருக்கு தம்பிதுரை, கிருஷ்ணகிரிக்கு கே.பி.முனுசாமி, தருமபுரிக்கு அன்பழகன், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம், நாமக்கல் தொகுதிக்கு தங்கமணி உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More : ’டெல்லி அரசியல் எனக்குப் பிடிக்காது’..!! ’2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி உறுதி’..!! அண்ணாமலை சரவெடி..!!

Advertisement