For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிமுக கூட்டணி உடைகிறது..? போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி..!! 2 நாட்களில் முடிவு அறிவிப்பு..!!

05:04 PM Mar 22, 2024 IST | 1newsnationuser6
அதிமுக கூட்டணி உடைகிறது    போட்டியிட வாய்ப்பு கொடுக்காததால் அதிருப்தி     2 நாட்களில் முடிவு அறிவிப்பு
Advertisement

அதிமுக கூட்டணியில் தொடர்வது குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும், தேமுதிகவுக்கு மத்திய சென்னை, விருதுநகர், திருவள்ளூர் (தனி), தஞ்சை, கடலூர் ஆகிய தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணிக்கு புரட்சி பாரதம் ஆதரவு தருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், திருவள்ளூர் தொகுதி கேட்டு அவர் விடுத்த கோரிக்கையை அதிமுக நிராகரித்ததாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த பூவை ஜெகன்மூர்த்தி, கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More : 2024 IPL போட்டியுடன் முடிகிறது தோனியின் கிரிக்கெட் சகாப்தம்..!! ஓய்வு அறிவிப்பு..!!

Advertisement