For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ராஷ்மிகா, கத்ரினாவை தொடர்ந்து சின்னத்திரை நடிகையின் ஆபாச வீடியோ..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

While the pornographic videos of Bollywood actresses like Rashmika, Aliabad, Katrina Kaif have been released one after the other, Kannada small screen actress's 'Deep Back' porn video has been released and has caused controversy.
12:21 PM Jun 21, 2024 IST | Chella
ராஷ்மிகா  கத்ரினாவை தொடர்ந்து சின்னத்திரை நடிகையின் ஆபாச வீடியோ     ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement

நடிகைகள் ராஷ்மிகா, ஆலியாபட், கத்ரினா கைப் என பாலிவுட் நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், கன்னட சின்னத்திரை நடிகையின் 'டீப் பேக்' ஆபாச வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அறிவியலின் புதிய கண்டுபிடிப்பான ஏஐ (Artificial Intelligence) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைகளிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல நன்மைகளை ஏஐ தொழில்நுட்பம் உள்ளடக்கியிருந்தாலும், மனித குலத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் அபாயத்தையும் ஏஐ தன்னகத்தே கொண்டுள்ளது. அந்த வகையில், ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்கள் பலரது வாழ்க்கையுடன் விளையாடத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகை ராஷ்மிகாவின் முகத்தை மார்ஃப் செய்து ஆபாச வீடியோ ஒன்று வெளியாகியது. ராஷ்மிகாவை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைஃப் டைகர் 3 படத்தில் நடித்த காட்சியை டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டனர். இதேபோல் நடிகை கஜோல் ஆடை மாற்றும் போலி வீடியோவும் வெளியானது. இந்நிலையில் தான், கடந்தாண்டு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய விருது வழங்கும் நிகழ்ச்சியில் வைஷ்ணவி கவுடா சிவப்பு நிற கவுன் அணிந்த கலந்து கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அதே புகைப்படங்களை மோசமாக எடிட் செய்த மர்மநபர்கள், வைஷ்ணவி கவுடாவை டீப்ஃபேக் மூலம் எக்ஸ்போஸ் செய்வது போல் காட்சிகளை உருவாக்கி சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர். மேலும், வைஷ்ணவி கவுடா என்ற பெயரில் போலி பேஸ்புக் கணக்கை தொடங்கி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை அதன் மூலம் பகிர்ந்துள்ளனர்.

வைஷ்ணவி கவுடா என்ற முகநூல் கணக்கில் இருந்து அந்த புகைப்படங்கள் பகிரப்பட்டதால், வைஷ்ணவியே இந்த புகைப்படங்களை வெளியிட்டிருப்பதாக சிலர் நினைத்துள்ளனர். கன்னட சின்னத்திரையில் சீதை வேடத்தில் நடித்து புகழ்பெற்ற வைஷ்ணவியை வேண்டுமென்றே இதுபோல் சித்தரித்து இருப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் குறித்து பெங்களூரு சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : ‘கள்ளச்சாராயம் விற்க திமுக கவுன்சிலர்கள் உடந்தை’..!! இதுவரை 50 பேர் மரணம்..!! இன்னும் எத்தனை பேரோ..? எடப்பாடி பழனிசாமி விளாசல்..!!

Tags :
Advertisement