For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ADMK | "வேண்டவே வேண்டாம்னு சொன்னாரே இப்போ எப்படி"..? அதிமுகவுடன் கூட்டணி வைத்த முக்கிய பெண் பிரபலம்..!!

08:36 AM Mar 16, 2024 IST | 1newsnationuser6
admk    வேண்டவே வேண்டாம்னு சொன்னாரே இப்போ எப்படி     அதிமுகவுடன் கூட்டணி வைத்த முக்கிய பெண் பிரபலம்
Advertisement

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து மக்கள் அரசியல் கட்சி, அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

Advertisement

மக்களவைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். சிறு கட்சிகள் பலவும் இந்த இரண்டு கூட்டணிக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், அனைத்து மக்கள் கட்சி அரசியல் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

பாமக மாநில இளைஞரணி செயலாளராக இருந்தவர் ராஜேஸ்வரி பிரியா. கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு இவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அந்தக் கூட்டணியில் தான் பாமக இணைந்தது. இது பிடிக்காத ராஜேஸ்வரி பிரியா அப்போது கட்சியை விட்டு விலகினார். பின்னர், அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கினார்.

அந்த கட்சிக்கு தலைவராகவும் இருந்து வருகிறார். அத்துடன் தொலைக்காட்சி நேரலைகளில் கலந்து கொண்டு பரபரப்பாக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அதிமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது எனக் கூறி வெளியேறிய ராஜேஸ்வரி பிரியா அதே அதிமுகவுக்கு இப்போது தனது ஆதரவை தெரிவித்துள்ளார். தனது கட்சியின் நிர்வாகிகளுடன் நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார்.

தங்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக ஆதரவுக் கடிதத்தை அவர் அளித்தார். அவரை அன்போடு வரவேற்று எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார். இப்படித் தினந்தோறும் ஒரு அரசியல் கட்சி அல்லது அமைப்புகளின் தலைவர்கள் வந்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read More : TANGEDCO | மின் கம்பம், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான கட்டணம் அதிரடி குறைப்பு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Advertisement