ADMK | திமுகவில் இருந்து விலகல்..!! எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு..!!
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. மேலும், வேட்புமனுக்களையும் தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பழனியைச் சேர்ந்தவர் கொங்கு மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம். இவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதியிலும் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கொங்கு மக்கள் முன்னணி நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுக கூட்டணிக்கு ஆதரவை தெரிவித்துள்ளார்.
Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! ஏராளமான பலன்கள் அறிவிப்பு..!! செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!!