For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜட்ஸ்மெண்ட்..!! சீரியல் நடிகை ஆர்த்திகா பகீர் தகவல்..!!

07:47 AM Mar 28, 2024 IST | Chella
வாய்ப்பும்  பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜட்ஸ்மெண்ட்     சீரியல் நடிகை ஆர்த்திகா பகீர் தகவல்
Advertisement

"வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” என்று சின்னத்திரை நடிகை ஆர்த்திகா கூறியுள்ளார்.

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஆர்த்திகா. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இவர் நடிப்புத் துறையில் வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதிரடியாக பதில் சொல்லி இருக்கிறார். “வாய்ப்பும், பணமும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அட்ஜஸ்மெண்ட் செய்ய வேண்டிய தேவை எனக்கில்லை. என் திறமைக்கு என்ன வாய்ப்பு வருகிறதோ அதுவே மகிழ்ச்சி. அதற்காக, கடவுளுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

அப்படி செய்தால்தான் வாய்ப்பு வரும். இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியும் என்றெல்லாம் இல்லை. அப்படியான சூழ்நிலை வந்தால், எனக்கு நடிப்பதைத் தவிர்த்து வேறு வேலைகளும் தெரியும்” என்றார். மேலும், “அப்படி வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்மெண்ட் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், துறைக்குள் புதிதாக வருபவர்களிடமும் அதை எதிர்பார்க்கிறார்கள். எனக்கு கவர்ச்சியாக நடிக்கப் பிடிக்காது. அதை முன்பே தயாரிப்பாளர்களிடமும், இயக்குநரிடமும் சொல்லி விடுவேன். அதனால், எனக்கு சம்பளம் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை” என்று பேசியுள்ளார்.

Read More : பரப்புரை முடிந்த பிறகு சோசியல் மீடியாவில் பிரச்சாரம் செய்வது குற்றமா..? சத்யபிரதா சாஹூ அதிரடி பதில்..!!

Advertisement