For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

90'ஸ் கிட்ஸ் கனவு கன்னி.. கிளாமர்க்கு நோ சொன்னதால் 22 வயசுல கேரியர் காலி..!! - பூவே உனக்காக நடிகை ஒபன் டாக்

Actress Sangeeta's interview about the reason behind her retirement from cinema is going viral
10:57 AM Oct 16, 2024 IST | Mari Thangam
90 ஸ் கிட்ஸ் கனவு கன்னி   கிளாமர்க்கு நோ சொன்னதால் 22 வயசுல கேரியர் காலி       பூவே உனக்காக நடிகை ஒபன் டாக்
Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை சங்கீதா .இவர் 90ஸ் காலகட்டத்தில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான ஹீரோயினாக பார்க்கப்பட்டார். குறிப்பாக ஹோம்லியான கதாபாத்திரத்துக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் சங்கீதா நடித்திருக்கிறார்.

Advertisement

பின் இவர் 2000 ஆண்டில் தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் சரவணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது பலருக்குமே ஆச்சரியமாக இருந்தது. சங்கீதாவின் கணவர் பூவே உனக்காக திரைப்படத்தில் கேமராமேனாக வேலை செய்திருந்தவர். அப்போது இருந்தே இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

சங்கீதாவிற்கு திருமணமான போது அவருக்கு 22 வயசு தான். அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் அவர் தமிழ், கன்னடம், மலையாளம் என்று மூன்று மொழியிலும் பிஸியான நடிகையாக என்று ஆனால், அதை எல்லாம் யோசிக்காமல் அவர் திருமணம் செய்து கொண்டார். பின் இவர் திடீரென்று சினிமாவை விட்டு விலகினார். குடும்பம், குழந்தை என்று தனிப்பட்ட வாழ்க்கையில் சங்கீதா பிசியாக இருக்கிறார். அதற்குப்பின் இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்த நிலையில், சினிமாவில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து நடிகை சங்கீதா அளித்த பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

அவர் அளித்த பேட்டியில், "எனக்கு விருப்பம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்ய மாட்டேன். கிளாமராக நடிக்கணும் என்ற கண்டிஷனுக்காகவே நான் நிறைய படங்களில் நடிக்கவில்லை. எனக்கு பிடித்த படங்களில் நடிப்பது தான் ரொம்ப பிடிக்கும். கிளாமராக நடிக்கணும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லாததால், சினிமாவிலிருந்தே ஒதுங்கிவிட்டேன்.

அத்துடன் எனக்கு, குழந்தை குடும்பம் என்று ஆனதால், சினிமாவில் தொடர முடியவில்லை.. குடும்பத்தை பார்த்துக் கொள்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மலையாளத்தில் நடித்தேன், தமிழில் நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.. சங்கீதா தெரிவித்திருக்கும் இந்த தகவல்தான், 90'ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.

Read more ; புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.360 உயர்ந்ததால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!

Tags :
Advertisement