முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கிய நடிகர் சூர்யா..!! ரசிகர்கள் மகிழ்ச்சி..!!

02:17 PM Dec 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஐஎஸ்பிஎல் என அழைக்கப்படும் இந்தியன் ஸ்டிரீட் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் சென்னை அணியை நடிகர் சூர்யா சொந்தமாக விலைக்கு வாங்கியுள்ளார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீப காலமாகவே, இந்த டி10 தொடர்களும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. அந்தத் தொடர் தற்போது இந்தியாவிலும் அடுத்தாண்டு மார்ச் 2ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த தொடரில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்‌ஷய் குமாரும், ஹைதராபாத் அணியை தெலுங்கு நடிகர் ராம்சரணும் வாங்கியுள்ளனர். அந்த வரிசையில், சென்னை அணியை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.

இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் கொல்கத்தா அணியின் உரிமையாளர் குறித்த விவரம் மட்டும் வெளியாகாமல் உள்ளது. சூர்யாவின் இந்த புது அவதாரத்திற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
ஐஎஸ்பிஎல்கிரிக்கெட்சென்னை அணிநடிகர் சூர்யா
Advertisement
Next Article