முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் தர்ஷனின் பண்ணை வீட்டில் மேலாளரின் சடலம்..!! போலீசாரிடம் சிக்கிய அதிர்ச்சி வீடியோ..!! நடந்தது என்ன..?

While actor Darshan is in jail in the Renuka Samy murder case in Karnataka, his manager Sridhar has committed suicide.
12:39 PM Jun 19, 2024 IST | Chella
Advertisement

கர்நாடகாவில் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மேலாளர் ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertisement

ரேணுகா சுவாமி என்ற ரசிகரை கொலை செய்த வழக்கில் நடிகர் தர்ஷன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தர்ஷனின் தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடா குறித்து கருத்து தெரிவித்ததால், ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக தர்ஷன் தெரிவித்தார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறை அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள தர்ஷனின் பண்ணை வீட்டில் ஸ்ரீதரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மன அழுத்தத்தில் உள்ளதால், தற்கொலை செய்துகொண்டதாக தர்ஷன் மேலாளர் ஸ்ரீதர் வீடியோ பதிவிட்டுள்ளார். தனது குடும்பத்தினர் யாரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டாம் என்று வீடியோவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இளைஞர் ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெறும் நிலையில், மேலாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷனிடம் மேலாளராக இருந்த மல்லிகார்ஜுனா என்பவர் 8 ஆண்டுகளாக காணாமல்போன தகவல் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் தர்ஷனின் பணத்தை முறைகேடு செய்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து நஷ்டமடைந்த நிலையில், 8 ஆண்டுகளாக மாயமானார். ரேணுகா சாமி கொலையை விசாரித்து வரும் போலீசாரே, தர்ஷன் மேலாளர் ஸ்ரீதர் தற்கொலையை விசாரிக்கின்றனர்.

Read More : மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த விராட் கோலி..!! ரசிகர்கள் செம ஹேப்பி..!!

Tags :
crime newsmurder
Advertisement
Next Article