For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

என்னை அடிப்பாரு.. அந்த விஷயத்தில் கூட இரக்கப்படல..!! பாக்யராஜ் ஆல் கண்ணீர் விட்ட நடிகை சுலக்ஷனா

Actor Bhagyaraj has explained about the romantic gossip while acting in the movie 'Dural Ninnu Pochu'
09:35 AM Sep 10, 2024 IST | Mari Thangam
என்னை அடிப்பாரு   அந்த விஷயத்தில் கூட இரக்கப்படல     பாக்யராஜ் ஆல் கண்ணீர் விட்ட நடிகை சுலக்ஷனா
Advertisement

நடிகை சுலக்ஷ்னா "தூறல் நின்னு போச்சு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இப்போது சினிமா மற்றும் சீரியல்களில் அம்மா மற்றும் பாட்டி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் "தூறல் நின்னு போச்சு" திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகர் பாக்யராஜ் உடன் வந்த காதல் கிசுகிசு பற்றி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Advertisement

அதில் தூறல் நின்னு போச்சு திரைப்படத்திற்கான ஆடிஷனில் நான் கலந்து கொள்ளும்போது எனக்கு இந்த திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைத்திருந்தேன். ஆனாலும் சரி என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று நினைத்திருந்தேன். அப்போது பாக்யராஜ் சார் என்னிடம் உங்களுக்கு சிரிக்க தெரியுமா? என்று கேட்டார். நான் சிரித்து காட்டினேன். பிறகு ஸ்கிரீன் ஸ்டேட்டஸ் எடுத்தார். அதில் நான் செய்தது அவருக்கு பிடித்து விட்டது.

சரி நாளைக்கு பொள்ளாச்சிக்கு ஷூட்டிங் இருக்கு வாங்க என்று சொன்னார். ஆனால் முதல் நாள் சூட்டிங் முடிந்தாலும் நீங்கள் சரியாக பண்ணலன்னு சொன்னா ஆளை மாற்றி விடுவேன் உங்களை அப்படியே பஸ் ஏற்றி வச்சிருவேன் என்று மிரட்டி இருந்தார். ஆனால் பொள்ளாச்சிக்கு போன பிறகு எனக்கு பெரிய அளவில் பயம் ஒன்றும் இல்லை. அதனால் தான் நன்றாக நடித்து விட்டேன். அதற்குப் பிறகு சில நேரங்களில் எனக்கு இயக்குனர் பாக்யராஜ் உடன் சண்டை வரும் . அப்போதெல்லாம் நான் நாளைக்கு சென்னைக்கு போயிடுவேன் என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.

ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவே மாட்டார். அதிலும் சில இடங்களில் எனக்கு அழுகை வரவில்லை என்பதற்காக என்னை அடித்திருக்கிறார். இன்டர்வியூ நேரத்தில் ஓங்கி என்னை அடித்து விடுவார். அப்போது நான் அழுது கொண்டிருப்பேன். அப்படியே நடித்து விடுவார். அதுபோல அந்த படத்தில் ஒரு காட்சியில் நான் கொள்ளிக்கட்டையின் மீது ஏறி நின்று நான் தப்பு பண்ணல... நான் கெட்டுப் போகல என்று ஒரு டயலாக் பேச வேண்டும்.

மற்ற படங்களாக இருந்திருந்தால் டூப்ளிகேட் கொள்ளிக்கட்டை வைத்திருப்பார்கள் ஆனால் இவர் நிஜத்தில் நெருப்பில் என்னை நிற்க வைத்து விட்டதால் சுட்டு கொப்புளம் வந்து விட்டது. அதிலேயே எனது கண்கள் சிவந்து கண்ணீர் வந்துவிட்டது. டயலாக்கும் பேச வேண்டும்... எல்லாம் செய்து முடித்த பிறகு என்னுடைய காலில் கொப்புளம் வந்துவிட்டது என்று தேங்காய் எண்ணெய் போட்டு விட்டார்கள்.

நான் வலியில் இருக்கும் போது பாக்யராஜ் வந்து இப்போ வலிக்கத்தான் செய்யும், கஷ்டப்பட்டா தான் நாம நிலைத்து நிற்க முடியும். நம்முடைய நடிப்பை தத்ரூபமாக கொடுக்க முடியும் என்று சொன்னார். இதையெல்லாம் மறக்க முடியாது. அதுபோல நான் அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பாக்யராஜ் உடன் அதிகமாக பேச மாட்டேன். அவரை எனக்கு பிடிக்கவே செய்யாது.

ஆனால் பாக்யராஜும் நானும் காதலிப்பதாக சில கிசுகிசு கிளம்பி வந்தது. அதில் கொஞ்சம் கூட உண்மை கிடையாது. அந்த நேரத்தில் காதல் கத்தரிக்காய் என்று எதுவும் எனக்கு வந்ததும் கிடையாது. அவரும் அந்த நினைப்பில் இருந்தது கிடையாது. ஆனால் எதற்காக இப்படி ஒரு செய்தியை பரப்பினார்கள் என்று எனக்கு இப்ப வரைக்கும் தெரியவில்லை என்று அந்த பேட்டியில் சுலக்ஷனா பேசியிருக்கிறார்.

Read more ; தவெக மாநாட்டிற்கு சிக்கல்..!! விஜய் எடுத்த அதிரடி முடிவு..!! தொண்டர்கள் அதிர்ச்சி..!!

Tags :
Advertisement