முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தாய்மாமன் மகளை 4-வது மனைவியாக்கிக் கொண்ட நடிகர் பாலா..!! இம்முறை நம்புவதாக பேட்டி..!!

Hope this married life goes well.
02:02 PM Oct 23, 2024 IST | Chella
Advertisement

வீரம், காதல் கிசு கிசு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் அறிமுகமானவர் மலையாள நடிகர் பாலா. இவர், இன்றைய தினம் 4-வது திருமணம் செய்திருக்கிறார். கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள கலூர் பாவகுளத்தில் இன்று காலை 8:30 மணியளவில் தனது தாய்மாமன் மகள் கோகிலாவை பாலா மணந்தார். பாலாவின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

Advertisement

திருமணம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, ”கோகிலா எனது உறவினர்தான். இந்தத் திருமணத்தில் என்னுடைய அம்மாவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவரும், திருமணத்தில் கலந்துகொள்ள நினைத்தார். ஆனால், அவரின் உடல்நிலை சரியில்லை. கோகிலாவின் கனவை இந்தத் திருமணம் நிறைவேற்றும். கோகிலாவுக்கு மலையாளம் தெரியாது.

இருப்பினும், கடந்த ஒரு வருடமாக எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதில் அவர் எனக்குப் பெரும் ஆதரவாக இருந்துள்ளார். இந்தத் திருமண வாழ்க்கை நன்றாகச் செல்லும் என்று நம்புகிறேன். கோகிலா எனது உறவினர் என்பதால் எனக்கு இதில் நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார் தெரிவித்தார். ஏற்கனவே, 3 திருமணங்களைச் செய்திருக்கும் நடிகர் பாலா, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது முன்னாள் மனைவி பிரபல பாடகி அம்ருதா அளித்த புகாரில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : நெருங்கும் தீபாவளி பண்டிகை..!! அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு..!!

Tags :
திருமணம்நடிகர் பாலாமலையாளம்
Advertisement
Next Article