For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்..!! மதுப்பிரியர்கள் செம ஹேப்பி..!! என்ன தெரியுமா..?

02:28 PM Nov 30, 2023 IST | 1newsnationuser6
டாஸ்மாக் கடைகளில் அதிரடி மாற்றம்     மதுப்பிரியர்கள் செம ஹேப்பி     என்ன தெரியுமா
Advertisement

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு இறுதிக்குள் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலாக இருக்கிறது.

Advertisement

டாஸ்மாக் கடைகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்த 15 மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி, ஏற்காடு, பெரம்பலூர், கோவை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் காலி பாட்டில்களை திரும்ப வழங்கினால் 10 ரூபாய் வழங்கும் சோதனை நடைபெற்றது.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையொட்டி, இந்த ஆண்டு இறுதிக்குள் காலி பாட்டில்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement