For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் அமமுக கிளை செயலாளர் காளீஸ்வரன் மரணம்..!! டிடிவி தினகரன் இரங்கல்..!!

02:08 PM May 10, 2024 IST | Chella
விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் அமமுக கிளை செயலாளர் காளீஸ்வரன் மரணம்     டிடிவி தினகரன் இரங்கல்
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. நேற்று (மே 09) வழக்கம் போல 50-க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இந்த ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் விருதுநகர் மத்திய மாவட்டம் சிவகாசி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட V.சொக்கலிங்காபுரம் கிளைக் கழகச் செயலாளர் திரு.கு.காளீஸ்வரன் அவர்கள் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது என்று டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த திரு.கு.காளீஸ்வரன் அவர்களை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Read More : மாதம் ரூ.2,80,000 சம்பளம்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Advertisement