For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர்..!! காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய பெண் மருத்துவர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

The strange punishment given by the doctor to the lover who got close to the female doctor and refused to marry him has caused a shock.
12:59 PM Jul 02, 2024 IST | Chella
காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞர்     காதலனின் பிறப்புறுப்பை வெட்டிய பெண் மருத்துவர்     அதிர்ச்சி சம்பவம்
Advertisement

பெண் மருத்துவரிடம் நெருங்கி பழகிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனுக்கு அந்த மருத்துவர் கொடுத்த வினோத தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மகப்பேறு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் 26 வயது பெண் மருத்துவர் 30 வயது இளைஞர் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மருத்துவரை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிய நபர், தனது காதலியுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனால், 2 முறை கர்ப்பம் தரித்த அந்த பெண் மருத்துவர் கர்ப்பத்தை கலைத்தும் உள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி காதலனை வற்புறுத்தியுள்ளார். இதனை பொருட்படுத்தாத அந்த இளைஞருக்கு இறுதி வாய்ப்பாக ஜூலை 1 வரை காலக்கெடு விதித்து தன்னை பதிவுத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார். இதற்காக சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டுமென தன் காதலனிடம் பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். ஆனால், வெகுநேரமாகியும் காதலன் வராத காரணத்தால் பெண் மருத்துவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளார்.

இதையடுத்து, தனது காதலனை தொடர்புகொண்ட அவர், வழக்கம்போல தன்னை சந்திக்க தான் பணிபுரியும் மருத்துவமனைக்கு வருமாறு தெரிவித்துள்ளார். பின்னர், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்ற பெண் மருத்துவர், அவருக்கு ஊசி மூலம் மயக்க மருந்தை செலுத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த இளைஞரின் பிறப்புறுப்பை அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்தியால் வெட்டி அறுத்துள்ளார். மயக்கத்தில் இருந்த நபருக்கு இரத்தம் அதிகளவில் வெளியேறியதால் பதறிப்போன மருத்துவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அவரிடமிருந்த கத்தியை கைப்பற்றியதுடன் பெண் மருத்துவரை கைது செய்தனர். மருத்துவமனையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து உயர்சிகிச்சைக்காக, பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-க்கு கூடுதல் வட்டி..!! பெண்களே இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

Tags :
Advertisement