Shoking: கணவருடன் இந்தியாவுக்கு டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரம்...!
இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் செய்யப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு கணவருடன் பைக் டூர் வந்த பெண், 7 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்கா பகுதியில் தங்கி இருந்தபோது, கணவரைக் கடுமையாக தாக்கிவிட்டு அப்பெண்ணை 7 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இக்கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களில் 3 பேர் கைது. மீதமுள்ள 4 பேரை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தும்கா மாவட்டத்தில் ஸ்பெயின் சுற்றுலாப் பயணி ஒருவரைக் கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியதாக ஜார்க்கண்ட் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. ஸ்பெயினைச் சேர்ந்த பெண், மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள ஹன்ஸ்திஹா காவல் நிலையப் பகுதியில் மார்ச் 1-ம் தேதி 7 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.