For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வீட்டிற்கு தோழியை அழைத்து வரும் மனைவி..!! போதை வஸ்து கொடுத்து பலாத்காரம் செய்யும் கணவன்..!! தொழிலே இதுதானாம்..!!

In Tirupati, the police arrested a husband and wife who took a video and threatened to rape their friends while they were intoxicated.
01:10 PM Jul 27, 2024 IST | Chella
வீட்டிற்கு தோழியை அழைத்து வரும் மனைவி     போதை வஸ்து கொடுத்து பலாத்காரம் செய்யும் கணவன்     தொழிலே இதுதானாம்
Advertisement

திருப்பதியில் தோழியாக பழகுபவர்களுக்கு கஞ்சா பழக்கப்படுத்தி போதையில் இருக்கும்போது கணவர் மூலம் பலாத்காரம் செய்ய வைத்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

திருப்பதியில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் பி.எல். இறுதியாண்டு படிக்கும் பிரணவ் கிருஷ்ணா, தன்னுடன் படித்து வந்த கர்னூலைச் சேர்ந்த தனது தோழியை அவ்வப்போது வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது, அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் கஞ்சா போடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். அவ்வாறு கஞ்சா போதையில் தோழி இருக்கும் போது அவரது கணவர் கிஷோர் ரெட்டியை விட்டு அந்த தோழியை பலாத்காரம் செய்ய செல்வாராம். பின்னர், அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொள்வார்களாம்.

பின்னர் அந்த வீடியோ, புகைப்படங்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி, அந்த இளம்பெண்ணை மிரட்டி கணவனும் மனைவியும் பணம் பறித்து வந்துள்ளனர். ஆனால், அவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண், திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், கணவன் - மனைவி இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ரூ.5 லட்சம் வரை பணம் பறித்ததும், இவர்கள் வலையில் பலர் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Read More : விபத்தில் பறிபோன காதலனின் உயிர்..!! கோஸ்ட் வெட்டிங் முறையில் கரம்பிடிக்கும் காதலி..!! நெகிழ்ச்சி சம்பவம்..!!

Tags :
Advertisement