முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பரபரப்பு..!! பள்ளியில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை..!! இரயிலை மறித்து போராட்டம்..!!

A train strike was held in Kharashtra to condemn the sexual harassment of 2 school girls.
03:59 PM Aug 20, 2024 IST | Mari Thangam
Advertisement

மகாராஷ்டிரா மாநிலம் பட்லாபூரில் 2 சிறுமிகளை பள்ளி தூய்மைப் பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள், பட்லாபூர் ரயில் நிலையம் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு வயது சிறுமிகள் இரண்டு பேரை பள்ளி தூய்மை பணியாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மழலையர் பள்ளியில் படிக்கும் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததாக பள்ளியின் பள்ளி உதவியாளரை தானே  காவல் துறை கைது செய்தது. இந்த சம்பவத்திற்கு எதிராக நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போராட்டத்திற்கு மத்தியில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பத்லாப்பூரில் நடந்த சம்பவத்தை தீவிரமாக கவனித்து வருவதாகக் கூறினார். "இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, சம்பவம் நடந்த பள்ளியின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். இந்த வழக்கை விரைவுபடுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்" என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

Read more ; ஹனிமூன் என்று பெயர் எப்படி வந்தது தெரியுமா? பலருக்கு தெரியாத சுவாரசிய தகவல்..!!

Tags :
harassmentschool girlstrain strikeகர்நாடகா
Advertisement
Next Article