For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மூடநம்பிக்கையால் விபரீதம்..!! வயிற்று வலியை குணப்படுத்த வயிற்றை கோடாறியால் வெட்டிய பூசாரி..!! பகீர் சம்பவம் நடந்தது எங்கே?

A temple priest has been arrested after he cut the stomach of a young man with an ax while he was seeking relief for his stomach ache.
12:45 PM Jul 14, 2024 IST | Mari Thangam
மூடநம்பிக்கையால் விபரீதம்     வயிற்று வலியை குணப்படுத்த வயிற்றை கோடாறியால் வெட்டிய பூசாரி     பகீர் சம்பவம் நடந்தது எங்கே
Advertisement

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேடகுட்டா கிராமத்தில் காசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. அந்தக் கோயிலில் ஐகப்ப கட்டா என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் வலியிலிருந்து நிவாரணம் பெற, பூசாரி ஜக்கப்பா கட்டாவிடம் கூறுகிறார்கள்.

Advertisement

பூசாரி ஜக்கப்பா கட்டா பக்தர்களைக் கீழே கிடத்தி, அவர்களுக்கு வலி இருப்பதாக அவர்கள் கூறும் இடத்தில் கற்பூரம் கலந்த வெந்நீரில் தடவிய கோடரியால் வெட்டுவார். வெட்டிய பின் மஞ்சள் பொடியை அங்கே ஊற்றி கட்டு போடுவார்கள். இவ்வாறு செய்வதால் தீராத வலிகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வகையில் ஒரு வாலிபர் வயிற்று வலியால் செல்லும்போது அவரை சிலர் படுக்க வைத்து கை கால்களை பிடித்து வைத்தனர். பின்னர் கட்டா அவரின் வயிற்றில் கோடாரியால் இருமுறை வெட்டினார். இதில் ரத்தம் பீறிட்டு வந்த நிலையில் பின்னர் மஞ்சள் பொடியை வைத்து  கட்டு போடுகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பூசாரியை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நரபலியை போன்று இதுவும் ஒரு கொடூரமான விஷயம் என்று கூறி வருகிறார்கள்.

Read more | 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்… 3 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகுது கனமழை…!

Tags :
Advertisement