முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீரென ஏற்பட்ட மாற்றம்..!! தமிழ்நாட்டில் மீண்டும் மழை..? வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

10:34 AM Jan 31, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடமேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், பின்னர் மழை பெய்யவில்லை என்பதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனிமூட்டம் மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது திடீரென ஏற்பட்ட கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும், நீலகிரியில் ஓரிரு இடங்களில் இரவு/அதிகாலை வேளையில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags :
தமிழ்நாடுபனி மூட்டம்புதுச்சேரிவறண்ட வானிலைவானிலை ஆய்வு மையம்
Advertisement
Next Article