For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி - வாக்களிக்காமல் திரும்பிச் சென்றதால் பரபரப்பு

05:00 PM Apr 19, 2024 IST | Baskar
நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி   வாக்களிக்காமல் திரும்பிச் சென்றதால் பரபரப்பு
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் திரை பிரபலங்களும் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில்,சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் நடிகர் சூரி வாக்களிக்க சென்றார். ஆனால், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால் தனது வாக்கினை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார். நடிகர் சூரி இதுதொடர்பாக தனது x தள பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் "நான் எனது ஜனநாயக கடமையையாற்ற வந்தேன். அனைத்து தேர்தல்களிலும் எனது கடமையை சரியான முறையில் செய்துள்ளேன். ஆனால், இந்த தேர்தலில் வாக்களர் பட்டியலில் எனது பெயர் விடுப்பட்டுள்ளது.

எனது மனைவியின் பெயர் இருந்தது.வாக்கு செலுத்த வேண்டும் என்ற ஆவலுடன் வந்தேன். ஆனால் எனது பெயர் இல்லாமல் போனது மன வேதனையாக உள்ளது. மனது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இந்த தவறு எப்படி நடந்தது என்று தெரியவில்லை. நான் ஜனநாயக கடமையாற்றவில்லை என்று வருத்தம் இருத்தாலும், மக்களாகிய நீங்கள் அனைவரும் 100% வாக்கினை செலுத்துங்கள்" என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

Read More: விஜய் பாணியில் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்திய நடிகர் விஷால்..!!

Advertisement