முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குழந்தைகளைக் கொன்று சமைத்த கானிபல் மனிதன்.! தர்காவில் வினியோகம் செய்யப்பட்ட நர மாமிசம்.!

11:57 AM Dec 15, 2023 IST | 1newsnationuser4
Advertisement

பாகிஸ்தான் நாட்டில் குழந்தைகளை கொலை செய்து அவர்களின் இறைச்சியை சமைத்து சாப்பிட்ட கொடூர மனிதனை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

Advertisement

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள முஸாபர்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் இறங்கினார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குழந்தைகளை கடத்திச் சென்று கொலை செய்து அவர்களது இறைச்சியை சாப்பிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு சென்று காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அலிகரசன் என்ற ஏழு வயது சிறுவன் உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறான். அந்த சிறுவன் அளித்த தகவலின் படி மூன்று வயது அப்துல்லா என்று சிறுவனும் ஒன்றரை வயது ஹபீஸா என்ற குழந்தையும் அந்த நபரால் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் அந்தக் கொடூரன் குழந்தைகளை கொன்ற பின்பு அவர்களது மாமிசத்தை சமைத்து சாப்பிட்டு இருக்கிறான்.

அந்த மாமிசத்தை அருகில் உள்ள தர்காவிலும் வினியோகம் செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கொலை சம்பவம் நடந்த இடத்திலிருந்து குழந்தைகளின் சிதைந்த உடல் பாகங்கள் மற்றும் கத்தி மீட்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்து இருக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவனுக்கு சுயநினைவு திரும்பிய பின் இந்த கொலை தொடர்பான பல தகவல்கள் வெளியாகும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags :
CanibalchildHuman meatpakistanshocking
Advertisement
Next Article