For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெங்களூரில் ஓர் பயங்கரம்!. 30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பெண்ணின் உடல்!. புழுக்கள் அரித்த நிலையில் மீட்பு!

Bengaluru barbarity: Young woman murdered at her home, body chopped into 30 pieces, stuffed into fridge
06:28 AM Sep 22, 2024 IST | Kokila
பெங்களூரில் ஓர் பயங்கரம்   30 துண்டுகளாக வெட்டி ப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பெண்ணின் உடல்   புழுக்கள் அரித்த நிலையில் மீட்பு
Advertisement

Bengaluru: பெங்களூரில் வீட்டின் ரெப்ரிஜிரேட்டரில் இருந்து பெண்ணின் உடல் 30 துண்டுகளாகக் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பெங்களூரில் மல்லேஸ்வரம் வயாலிகாவல் [Vyalikaval] பகுதியில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அங்கு சோதனை நடத்திய நிலையில் வீட்டில் ஆன் செய்யப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த 165 லிட்டர் சிங்கிள் டோர் பிரிட்ஜில் உடல் 30 துண்டங்களாகப் புழுக்கள் அரித்த நிலையில் இருந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் மேற்கு வங்கம் அல்லது சத்தீஸ்கரை சேர்ந்த மகாலட்சுமி (26) என அடையாளம் காணப்பட்டுள்ளது. பெங்களூரில் வீடு எடுத்து மால் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். சில நாட்களாக அண்ணன் அவளுடன் தங்கியிருந்தான். மேலும், அவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருந்தும், தனியாக வசித்து வந்ததையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த பெண் வெகு நாட்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த போலீசார் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட கைரேகைகள் பாரன்சிக் சைன்ஸ் ஆய்வகத்துக்கு (FSL) சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது கணவர் ராணாவை கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இதேபோன்ற வழக்கு 2022 ஆம் ஆண்டில் டெல்லியில் உள்ள சட்டர்பூரில் நடந்தது, அங்கு 27 வயதான ஷ்ரத்தா வாக்கர், அவரது காதலனும், 29 வயதான அஃப்தாப் அமின் பூனாவாலா என்பவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.

Readmore: 58 பேருடன் உடலுறவு!. கோடிக்கணக்கில் லஞ்சம்!. சிக்கிய சீனாவின் மூத்த பெண் அதிகாரி!. 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Tags :
Advertisement