For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பைத்தியன் போல் சில நேரம்.. உரிய சிகிச்சை உண்டு..!! - பாடகி சுசித்ராவை விலாசிய வைரமுத்து..

A few days ago, when singer Suchitra spoke controversially about poet Vairamuthu, poet Vairamuthu shared a response on his X site.
10:01 AM Sep 20, 2024 IST | Mari Thangam
பைத்தியன் போல் சில நேரம்   உரிய சிகிச்சை உண்டு       பாடகி சுசித்ராவை விலாசிய வைரமுத்து
Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக திகழ்பவர் வைரமுத்து. பாடல் ஆசிரியர் ஆக மட்டுமல்லாமல் பல புதினங்கள் நாவல்கள் சிறுகதைகள் என இலக்கியங்கள் சார்ந்த பல நூல்களை எழுதி வருகிறார். வைரமுத்து என்று சொன்னாலே அனைவர் மனதிலும் நிற்பது கள்ளிக்காட்டு இதிகாசம். இது வைரமுத்துவின் நூல்களில் மிகவும் பிரபலமான ஒரு புத்தகம். சினிமாவில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை எழுதி மிகவும் புகழ் பெற்று விளங்கியவர் வைரமுத்து.

ஆனால் அந்த புகழை எல்லாம் ஒரே நொடியில் காலி பண்ணியவர் பாடகி சின்மயி. சின்மயிடம் வைரமுத்து பாலியல் ரீதியாக சில செயல்களை செய்தார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அதைப் பற்றி நடிகர் சங்கம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் சின்மையி அவருடைய கருத்திலிருந்து பின்வாங்கவில்லை. ஆனால் சின்மயிக்கு அவருடைய வேலை பறிபோனது தான் மிச்சம். இதைப் பற்றி சமீபத்தில் பாடகி சுசித்ரா பல சர்ச்சைக்குரிய தகவல்களை பகிர்ந்திருந்தார்.

எனக்கும் சில சம்பவங்கள் நடந்தது என்றும் கூறியிருந்தார். வைரமுத்து என்னை வீட்டிற்கு அழைத்தார். போனில் தவறாக பேசுவார் உள்ளிட்ட பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்,

"வாழ்வியல் தோல்விகளாலும்

பலவீனமான இதயத்தாலும்

நிறைவேறாத ஆசைகளாலும்

மன அழுத்தத்திற்கு உள்ளாகி

அதன் உச்சமாய்

மூளைப் பிறழ்வுக்கு ஆளாகும் சிலர்

ஒருதலையாய் நேசிக்கப்பட்டவர்கள் மீது

வக்கிர வார்த்தைகளை

உக்கிரமாய் வீசுவர்;

தொடர்பற்ற மொழிகள் பேசுவர்

பைத்தியம்போல் சிலநேரமும்

பைத்தியம்

தெளிந்தவர்போல் சிலநேரமும்

காட்சியளிப்பர்

தம்மைக் கடவுள் என்று

கருதிக்கொள்வர்

இந்த நோய்க்கு

‘Messianic Delusional Disorder’

என்று பெயர்

அவர்கள் தண்டிக்கப்பட

வேண்டியவர்கள் அல்லர்;

இரக்கத்திற்குரியவர்கள்;

அனுதாபத்தால்

குணப்படுத்தக் கூடியவர்கள்

உளவியல் சிகிச்சையும்

மருந்து மாத்திரைகளும் உண்டு

உரிய மருத்துவர்களை

அணுக வேண்டும் “

என பதிவிட்டுள்ளார். பாடகி சுசித்திரா கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்த சில தினங்களில் வைரமுத்து இந்த பதிவினை பதிவிட்டுள்ளார். ஆனால்,, யாருக்கு இந்த பதிவு என சரிவர தெரியாததால் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். தற்போது இந்த பதிவு இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Read more ; குட்நியூஸ்!. இனி மாதம் ரூ.2000 கிடைக்கும்!. மகளிர் உரிமை தொகையை அதிகரிக்க திட்டம்!

Tags :
Advertisement